ஆப்நகரம்

காவல்நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி, மொஹரம் கொண்டாட்டம்: ஏராளமான இந்து, இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

ஓசூரில் நடைபெற்ற மதநல்லிணக்க விருந்தில், ஏராளமான இந்துக்கள், இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Samayam Tamil 24 Sep 2018, 1:05 pm
ஓசூரில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க விருந்தில், ஏராளமான இந்துக்கள் இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
Samayam Tamil 102525_Hindu Muslim (2).


தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி இந்த மாதம் 13ம் தேதி கொண்டாடப்பட்டது. இதே போல், மொஹரம் பண்டிகை 21ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்த இரண்டு பண்டிகையையும் சேர்த்து சிறப்பாக கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறை சார்பில் மதநல்லிணக்க விருந்து நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் கெலமங்கலம் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மதநல்லிணக்க விருந்து விழாவில், காவல் உதவியாளர் செல்வராகவன் தலைமையில்,போலீசாரே மக்களுக்கு உணவை பரிமாறினர். இது குறித்து விருந்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த மதநல்லிணக்க விருந்தில், இந்து, இஸ்லாமியர்கள் இருவரும் உணவை மட்டும் அல்ல, அன்பையும் சேர்த்தே பரிமாறிக் கொண்டோம். இது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்’. இவ்வாறு தெரிவித்தனர்.

அடுத்த செய்தி