ஆப்நகரம்

சென்னையில் இன்று 820 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மூன்று நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முதல்நாளான இன்று 820 சிலைகள் கரைக்கப்பட்டன

TNN 27 Aug 2017, 5:05 pm
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மூன்று நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முதல்நாளான இன்று 820 சிலைகள் கரைக்கப்பட்டன
Samayam Tamil vinayakar statue in chennai
சென்னையில் இன்று 820 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது


விநாயகர் சதுர்த்தி பூஜைகள் முடிந்தவுடன் பெரய அளவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், மூன்றாயிரம் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் உள்ளன.

இந்நிலையில், சென்னையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதற்கு இன்று முதல் மூன்று நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்று சிவசேனா, கந்தர்சேனை உள்ளிட்ட அமைப்புகளின் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கரைக்கப்பட்டது.

அடுத்த செய்தி