ஆப்நகரம்

ஆசிட் வீச்சில் பலியான வினோதினியின் தந்தை மரணம்

ஆசிட் வீச்சில் பலியான வினோதினியின் தந்தை ஜெயபால் ஞாயிற்றுகிழமை மரணம் அடைந்தார்.

TNN 3 Oct 2016, 8:16 pm
காரைக்கால்: ஆசிட் வீச்சில் பலியான வினோதினியின் தந்தை ஜெயபால் ஞாயிற்றுகிழமை மரணம் அடைந்தார்.
Samayam Tamil vinothini father died
ஆசிட் வீச்சில் பலியான வினோதினியின் தந்தை மரணம்


கடந்த 2012ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ், ஒரு தலைக் காதல் விவகாரத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு பஸ் ஏற தந்தையுடன் சென்றுகொண்டிருந்தபோது வினோதினியின் முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம் வெந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த வழக்கில் சுரேஷ் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.மகள் இறந்த துக்கத்தில் இருந்த வினோதினியின் தாய் சரஸ்வதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மகள் இருவரையும் இழந்த ஜெயபால் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வந்தார். மதுப்பழக்கமும் இருந்து வந்தது. கடந்த சில தினங்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாம்.

நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூங்கினார். நேற்று நீண்டநேரமாகியும் கண்விழிக்காததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜெயபால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.ஒருதலை காதலால் ஒரு பெண்ணின் குடும்பமே அழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி