சென்னை: மக்களின் முதல்வராக திகழ்ந்த ஜெயலலிதாவை பார்க்க சென்ற தொண்டர்களுக்கு தடியடி மட்டுமே மிஞ்சியுள்ளது. ஆனால் அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் எளிதாக அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 22 ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஒவ்வொரு தொண்டரும் துடித்து வருகின்றனர். இதற்காக மருத்துவமனை வாசலிலேயே அதிமுக தொண்டர்கள் சாப்பாடு, தண்ணியில்லாமல் பிரார்த்தித்தபடி தவமாய் தவமிருந்தார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை தலையில் பேரிடியை இறக்கியது. ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிந்தார் என்ற செய்தி தான் அது.
தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள, ராஜாஜி ஹாலில் சென்றாவது அவரது முகத்தை பார்த்துவிட வேண்டும் என கூட்டம் கூட்டமாக சென்றுவருகின்றனர்.
தங்கள் தலைவியின் முகத்தை எப்படியும் கடைசியாக ஒருமுறையேனும் பார்த்துவிடலாம் என்பதற்காக பல மணிநேரம் பல கிலோ மீட்டர் தொலைவு நீண்டு கிடக்கும் வரிசையில் அசாராமல் நின்றபடி காத்திருக்கிறார்கள்.
#WATCH: Police resorts to mild lathi-charge outside Rajaji Hall in Chennai as huge crowd gathers to pay their last respects to #Jayalalithaa pic.twitter.com/yXqcWMm7Mg — ANI (@ANI_news) 6 December 2016 தலைவியை பார்க்க முடியாமல் நேரம் செல்கிறதே என்ற கொந்தளிப்பில் தடுப்புகளை உடைத்துவிட்டு ராஜாஜி ஹாலுக்குள் பாய்ந்த அந்த பாசக் கூட்டத்தை, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,
போலீசாரோ அந்த கூட்டத்தின் உணர்ச்சிகளைத் தாண்டி, கடமை உணர்வோடு தடியடி தாக்குதல் நடத்தினர். ஆனால், தங்கள் தலைவின் முகத்தை பார்க்க சற்று கூட அசராமல் அப்படி அடிவாங்கியபடி தொண்டர்கள் அங்கேயே காத்திருக்கின்றனர்.
ஆனால், சினி நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும், ஈசியாக அஞ்சலி செலுத்திச்செல்கின்றனர். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை கடைசி முறை கூட கடை கோடி தொண்டனுக்கு காண கிடைக்காதது எந்த வகையில் நியாயம் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பு.
கடந்த செப்டம்பர் 22 ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஒவ்வொரு தொண்டரும் துடித்து வருகின்றனர். இதற்காக மருத்துவமனை வாசலிலேயே அதிமுக தொண்டர்கள் சாப்பாடு, தண்ணியில்லாமல் பிரார்த்தித்தபடி தவமாய் தவமிருந்தார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை தலையில் பேரிடியை இறக்கியது. ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிந்தார் என்ற செய்தி தான் அது.
தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள, ராஜாஜி ஹாலில் சென்றாவது அவரது முகத்தை பார்த்துவிட வேண்டும் என கூட்டம் கூட்டமாக சென்றுவருகின்றனர்.
தங்கள் தலைவியின் முகத்தை எப்படியும் கடைசியாக ஒருமுறையேனும் பார்த்துவிடலாம் என்பதற்காக பல மணிநேரம் பல கிலோ மீட்டர் தொலைவு நீண்டு கிடக்கும் வரிசையில் அசாராமல் நின்றபடி காத்திருக்கிறார்கள்.
#WATCH: Police resorts to mild lathi-charge outside Rajaji Hall in Chennai as huge crowd gathers to pay their last respects to #Jayalalithaa pic.twitter.com/yXqcWMm7Mg — ANI (@ANI_news) 6 December 2016 தலைவியை பார்க்க முடியாமல் நேரம் செல்கிறதே என்ற கொந்தளிப்பில் தடுப்புகளை உடைத்துவிட்டு ராஜாஜி ஹாலுக்குள் பாய்ந்த அந்த பாசக் கூட்டத்தை, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,
போலீசாரோ அந்த கூட்டத்தின் உணர்ச்சிகளைத் தாண்டி, கடமை உணர்வோடு தடியடி தாக்குதல் நடத்தினர். ஆனால், தங்கள் தலைவின் முகத்தை பார்க்க சற்று கூட அசராமல் அப்படி அடிவாங்கியபடி தொண்டர்கள் அங்கேயே காத்திருக்கின்றனர்.
ஆனால், சினி நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும், ஈசியாக அஞ்சலி செலுத்திச்செல்கின்றனர். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை கடைசி முறை கூட கடை கோடி தொண்டனுக்கு காண கிடைக்காதது எந்த வகையில் நியாயம் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பு.