சிவகாசி: ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தது. அதனால் பட்டாசுப் பொருட்களுக்கு 28% வரிவிதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியுற்ற பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், கடந்த ஜூன் 30ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 700க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், 600க்கும் அதிகமான விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.
வேலைநிறுத்தம் காரணமாக 5 லட்சம் பேர் வேலையிழந்தனர். இந்நிலையில் பட்டாசு மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தை திரும்ப பெறுவதாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத் தம்பி தெரிவித்துள்ளார்.
Virudhu Nagar fire works companies strike called off.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தது. அதனால் பட்டாசுப் பொருட்களுக்கு 28% வரிவிதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியுற்ற பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், கடந்த ஜூன் 30ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 700க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், 600க்கும் அதிகமான விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.
வேலைநிறுத்தம் காரணமாக 5 லட்சம் பேர் வேலையிழந்தனர். இந்நிலையில் பட்டாசு மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தை திரும்ப பெறுவதாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத் தம்பி தெரிவித்துள்ளார்.
Virudhu Nagar fire works companies strike called off.