ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவு : மாவட்ட அளவில் விருதுநகர் முதலிடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது.

TOI Contributor 19 May 2017, 10:39 am
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது.
Samayam Tamil virudhunagar district gets more percentage of passes in sslc exam results
பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவு : மாவட்ட அளவில் விருதுநகர் முதலிடம்!


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி துவங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரி என மொத்தமாக 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில் வழக்கம் போல மாணவர்களை (92.5 சதவீதம்) விட மாணவிகளே (96.2 சதவீதம்) அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் 98.55 சதவீதம் பேர் தேர்ச்சியாகி முதலிடம் பிடித்தது.

இதை தொடர்ந்து கன்னியாகுமரி 98.17 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று இரண்டாவது இடமும், ராமநாதபுரம் (98.16 சதவீதம்), ஈரோடு (97.97 சதவீதம்), தூத்துக்குடி (97.16 சதவீதம்) முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடமும் பெற்றது.

அடுத்த செய்தி