ஆப்நகரம்

விருதுநகர்: தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி!

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2020, 4:35 pm
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் காலை 11 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே தேர்தல் அதிகாரிக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Samayam Tamil விருதுநகர்


இதையடுத்து தேர்தல் அதிகாரி செல்வராஜ் தேர்தலை மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைத்தார். இதனால் அதிமுக கவுன்சிலர்கள் வெளியே சென்றனர்.

அப்போது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ராஜவர்மன் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு அதிமுக கவுன்சிலரின் தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார் .

உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு: திமுகவுக்குள்ளேயே சண்டை!

அதைத் தொடர்ந்து இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் இருவரும் அதிகாரியிடம் தேர்தல் இன்று நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி செல்வராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.

புதுக்கோட்டை: திமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற அதிமுக!

திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் இருவரும் உள்ளே சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Live updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு எத்தனை இடங்கள்?

தேர்தல் அதிகாரியை 15 கவுன்சிலர்களும் வந்ததற்கான ஒப்புதல் சீட்டு வழங்கிய பின் வெளியேற்ற வேண்டும் எனக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மூன்று வாசல்கள் முன்பும் ஒவ்வொரு வாசலிலும் கவுன்சிலர்கள் 3 பிரிவாக பிரிந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை வெளியே விடாமல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி