ஆப்நகரம்

டெல்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் பரமக்குடி சிறையில் அடைப்பு!!

விசா விதிமுறைகளை மீறியதாக இந்தோனேசியர்கள் எட்டு பேர் பரமக்குடியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Samayam Tamil 11 Apr 2020, 2:50 am
சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்திய வெளிநாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 9 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil visa


சுமிஸ்னி(43), சிட்டிரோகானா(45) உட்டார, முகமது அலி, ரமலான்பின் இப்ராகிம் (47) அமான் ஜாஹரியா(50) ஜெய்லானி,(42) முகமது நாசர் இப்ராகிம் (50), உள்ளிட்ட எட்டு பேர், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தோனேசியாவிலிருந்து சுற்றுலா விசாவில் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, மார்ச் 8 ஆம் தேதி மதுரை வந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, சிக்கல், ஒப்பிலான் தேர்போகி உள்ளிட்ட கிராம பகுதிகளில் மதரீதியான கூட்டங்கள் நடத்திவிட்டு கடந்த மாதம் 24 ஆம் தேதி ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு 144 தடை உத்தரவை மீறி சென்றுள்ளனர்.

பாதிப்பு அதிகம்..! விழிப்புணர்வை கடைபிடிக்காத மேலப்பாளையம் கிராமம்...

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், குழுவாக பள்ளிவாசலில் இருந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தொற்றுநோய் பரவ இவர்கள் காரணமாக இருந்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, இந்தோனேசியாவை சேர்ந்த 8 பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் மீது ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒன்பது பேரையும் வரும் 24 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி, பரமக்குடி சிறையில் அடைக்க நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து ஒன்பது பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி