ஆப்நகரம்

சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: விஷால்

சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்காகவும், மக்களுக்காகவும் தான் நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

TNN 4 Dec 2017, 4:54 am
சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்காகவும், மக்களுக்காகவும் தான் நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vishal explains why i am contest in rk nagar by election
சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: விஷால்


தமிழகம் முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், மற்றும் டிடிவி தினகரன் அணியின் சார்பில் அவரே போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக தொடர்பாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்த நிலையில், தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அது தொடர்பாக அவர் கூறுகையில், இதில், நான் போட்டியிடுவதால், எனக்கு அரசியல் ஆசை எதுவும் இல்லை. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

ஆர்.கே.நகர் தொகுதி பற்றி நான் நன்கு அறிவேன். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அந்த தொகுதியில் நான் களம் இறங்கி வேலை செய்திருக்கிறேன். அந்த தொகுதியில் சாதாரண ஏழை மக்கள் வாழ்கிறார்கள். இன்னும், அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைக்க துடிக்கும் இளைஞர்களும் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். அந்த தொகுதியில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வரும் அந்த மக்களுக்காக நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி