ஆப்நகரம்

டோக்கன் வாங்கி வரிசைல நில்லு: விஷாலை தடுத்த சுயேட்சைகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற நடிகர் விஷாலை சுயேட்சைகள் தடுத்து நிறுத்தினர்.

TNN 4 Dec 2017, 2:47 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற நடிகர் விஷாலை சுயேட்சைகள் தடுத்து நிறுத்தினர்.
Samayam Tamil vishal prevented from filing nomination for rk nagar by polls
டோக்கன் வாங்கி வரிசைல நில்லு: விஷாலை தடுத்த சுயேட்சைகள்


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிவடைகிறது. கடைசி நேரத்தில் ஏராளமான சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்தனர். இதனால் அனைவருக்கும் டோக்கன் வழங்கி ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் வீர நடை போட்டு அனைவரையும் முந்திக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டிருக்கிறார். இதனால் சுயேட்சைகள் கூடி அவரைத் தடுத்து முறையாக தங்களைப் போல டோக்கன் வாங்கிவிட்டு வரிசையில் நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து விஷால் வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருக்கிறார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு இல்லம் மற்றும் எம்ஜிஆர் இல்லம் ஆகியவற்றுக்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் அரசியல்வாதியாக தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மக்கள் பிரதிநிதியாகவே போட்டியிடுகிறேன். ஆர்.கே.நகர் மக்களின் அடிப்படைத் தேவை என்ன? பிரச்னைகள் என்ன? அவை இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளன? இது பற்றி யாரிடம் கேட்பது? இதற்கெல்லாம் விடையாக இத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.” என்று கூறினார்.

மேலும் தனது திடீர் அரசியல் பிரவேசத்திற்குக் காரணமாக தனது பின்னணியில் யாரும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி