ஆப்நகரம்

சுயேச்சையாக போட்டுயிடும் ஒருவரை வெற்றிபெறச் செய்வேன்: விஷால்

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் ஒருவரை வெற்றி பெற வைப்பேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

TNN 6 Dec 2017, 10:40 am
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் ஒருவரை வெற்றி பெற வைப்பேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
Samayam Tamil vishal says that he will make win non political person in r k nagar election
சுயேச்சையாக போட்டுயிடும் ஒருவரை வெற்றிபெறச் செய்வேன்: விஷால்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமாக 72 மனுக்கள் ஏற்கப்பட்டன.

விஷால் வேட்புமனு முதலில் நிராகரிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் தனது மனு ஏற்கப்பட்டுவிட்டதாக விஷால் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றும், தேர்தல் களத்தில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். ஆனால் இரவு 12 விஷாவின் மணு நிராகரிக்கப்பட்டது என்று சட்டபூர்வ அறிவைப்பை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

இதுகுறித்து விஷால் கூறும்போது, “வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் கூறியது வீடியோவாக என்னிடம் உள்ளது. வேட்பு மனுவை முன்மொழிந்தவரின் வீட்டிற்கே சென்று அவர்களை மிரட்டியுள்ளனர். என்ன நடந்தது என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்தான் தெரிவிக்க வேண்டும்.
படத்தில் நடக்கும் காட்சிகளைப்போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டன. இத்தனை சிக்கல்கள் இருக்கும் என நினைக்கவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இதுதான் கதியா. எனக்கே இந்த நிலை ஏற்பட்டால் மற்றவரக்ளுக்கு என்ன நிலை ஏற்படும் . சுயச்சையாக நிற்கும் ஒருவரைதான் நான் வெற்றிபெற வைப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி