ஆப்நகரம்

புதுக்கோட்டை ஜல்லிகட்டில் பார்வையாளர் மாடு முட்டி மரணம்

புதுக்கோடையில் நடந்த ஜல்லிகட்டில் 45 வயது நபர் ஒருவர் காளை தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.

Samayam Tamil 17 Jan 2018, 1:56 pm
புதுக்கோடையில் நடந்த ஜல்லிகட்டில் 45 வயது நபர் ஒருவர் காளை தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.
Samayam Tamil vistor dies in jallikatrt at vadamalappur village in pudukkottai district
புதுக்கோட்டை ஜல்லிகட்டில் பார்வையாளர் மாடு முட்டி மரணம்


புதுக்கோடையில் உள்ள வடமலப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. அப்போது களத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று வேலியை தாண்டி ஓடியது. அந்த காளை பார்வையாளர் எம். ஜீவா குமாரை முட்டியது. இதனால் அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் காயம் பலமாக இருந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிகட்டில் சாணார்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவர் மாடு முட்டியதில் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

அடுத்த செய்தி