ஆப்நகரம்

ஜெயலலிதாவை பார்த்தீங்களா? ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் நேரில் விளக்கம்!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி, விவேக் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 13 Feb 2018, 6:21 pm
சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி, விவேக் விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil vivek appeared before jayalalitha death inquiry commission
ஜெயலலிதாவை பார்த்தீங்களா? ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் நேரில் விளக்கம்!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் என பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இளவரசியின் மகனும், ஜெயா டிவியின் சி.இ.ஓ.,மான விவேக் ஜெயராமனை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று காலை ஆணையம் முன்பு, விவேக் நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, போயஸ் கார்டனில் விவேக் இருந்ததாகவும், அவர் மரணமடையும் போது, வெளிநாட்டில் இருந்ததாகவும் தெரிவித்தார். தகவல் தெரிந்தவுடன் சென்னை திரும்பியதாக கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், மீண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி ஆஜராக உள்ளதாக குறிப்பிட்டார்.

Vivek appeared before Jayalalitha death inquiry commission.

அடுத்த செய்தி