ஆப்நகரம்

தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்க: விவேக் ஜெயராமன்!

என்.ஆர்.ஐ., கோட்டாவில் சட்டம் படித்த விவகாரத்தில் தவறிருந்தால் நடவடிக்கை எடுங்கள் என விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Mar 2018, 3:40 pm
சென்னை: என்.ஆர்.ஐ., கோட்டாவில் சட்டம் படித்த விவகாரத்தில் தவறிருந்தால் நடவடிக்கை எடுங்கள் என விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 12


அம்பேத்கர் சட்டப் பல்கலை.,யில் விதி மீறி வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமனுக்கு படிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து விவேக் ஜெயராமன் அளித்துள்ள விளக்க அறிக்கையில்,’ என்ஆர்ஐ கோட்டா மோசடியில் தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள்.

சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள என் சகோதரி மூலம் அந்த பிரிவில் படித்தேன். சரியான சான்றிதழ்கள் கொடுத்தே கல்லூரியில் சேர்ந்தேன். அதை தற்போது சமர்ப்பிக்க தயாராக உள்ளேன். ’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Vivek Jayaraman says that if anything i did wrong, the Vivlance department can take action against me.

அடுத்த செய்தி