கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிடில் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த சூழலில், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா காலமானதால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள அவர்களது தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.
இதனிடையே, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ளது. அதே சமயம் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சசிகலா விடுதலையில் இதுதான் சிக்கல்: வெளியான தகவல்!
இதையொட்டி, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகை செலுத்தப்பட்டது. எனவே, அவரது விடுதலை எப்போது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில், ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்றும், அப்போது சசிகலா 10 நிமிடம் கண் கலங்கி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் சசிகலா, இளவரசியோடு மற்ற சிறைக் கைதிகளும் கலந்துகொண்டதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எளிய பின்னணியில் இருந்து வந்த சசிகலாவை தன் உடன்பிறந்த சகோதரியாக, தன் நிழலாக அங்கீகரித்தவர் ஜெயலலிதா. நெருக்கடியான தருணங்களில் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக நின்ற சசிகலா, போயஸ் தோட்டத்தின் சக்தியாக உருவெடுத்தார். எத்தனையோ சோதனைகள், பிரிவுகள் வந்த போதும், சசிகலாவை எந்த இடத்திலும் ஜெயலலிதா விட்டுக்கொடுத்ததே இல்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த சூழலில், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா காலமானதால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள அவர்களது தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.
இதனிடையே, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ளது. அதே சமயம் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சசிகலா விடுதலையில் இதுதான் சிக்கல்: வெளியான தகவல்!
இதையொட்டி, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகை செலுத்தப்பட்டது. எனவே, அவரது விடுதலை எப்போது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில், ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்றும், அப்போது சசிகலா 10 நிமிடம் கண் கலங்கி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் சசிகலா, இளவரசியோடு மற்ற சிறைக் கைதிகளும் கலந்துகொண்டதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எளிய பின்னணியில் இருந்து வந்த சசிகலாவை தன் உடன்பிறந்த சகோதரியாக, தன் நிழலாக அங்கீகரித்தவர் ஜெயலலிதா. நெருக்கடியான தருணங்களில் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக நின்ற சசிகலா, போயஸ் தோட்டத்தின் சக்தியாக உருவெடுத்தார். எத்தனையோ சோதனைகள், பிரிவுகள் வந்த போதும், சசிகலாவை எந்த இடத்திலும் ஜெயலலிதா விட்டுக்கொடுத்ததே இல்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.