பெங்களூரு: ஜெயலலிதாவை கொன்ற பாவம் சும்மா விடாது என்று சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு ஏராளமான கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு 100க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. அவை ’சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூரு’ என்ற முகவரியிட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கடிதங்களில் ஜெயலலிதா உயிரிழப்பிற்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும், அது திட்டமிட்ட கொலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை கொன்றுவிட்டீர்கள் என்றும், நன்றி கெட்டவள் என்றும், வாழ்வளித்த தலைவிக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஜெயலலிதாவின் பாவம் சும்மா விடாது என்றும் கூறியுள்ளனர். அணு, அணுவாக சித்ரவதை அனுபவிப்பீர் என்றும் எழுதியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவிற்கு வந்த கடிதங்களில் மோசமானவற்றை கண்டறிந்து, அவற்றை அழிக்கும் செயலில் இளவரசி ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் அனைத்து கடிதங்களையும் படித்து வந்த சசிகலா, மோசமான வார்த்தைகள் காரணமாக படிப்பதை நிறுத்திக் கொண்டார்.
Incarcerated AIADMK leader VK Sasikala has received a barrage of letters from Tamil Nadu, accusing her of killing J Jayalalithaa.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு 100க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. அவை ’சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூரு’ என்ற முகவரியிட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கடிதங்களில் ஜெயலலிதா உயிரிழப்பிற்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும், அது திட்டமிட்ட கொலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை கொன்றுவிட்டீர்கள் என்றும், நன்றி கெட்டவள் என்றும், வாழ்வளித்த தலைவிக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஜெயலலிதாவின் பாவம் சும்மா விடாது என்றும் கூறியுள்ளனர். அணு, அணுவாக சித்ரவதை அனுபவிப்பீர் என்றும் எழுதியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவிற்கு வந்த கடிதங்களில் மோசமானவற்றை கண்டறிந்து, அவற்றை அழிக்கும் செயலில் இளவரசி ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் அனைத்து கடிதங்களையும் படித்து வந்த சசிகலா, மோசமான வார்த்தைகள் காரணமாக படிப்பதை நிறுத்திக் கொண்டார்.
Incarcerated AIADMK leader VK Sasikala has received a barrage of letters from Tamil Nadu, accusing her of killing J Jayalalithaa.