ஆப்நகரம்

சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரிந்து விடும்: வெளியான முக்கிய தகவல்!

சசிகலாவின் விடுதலை தொடர்பான தகவல் இரண்டு நாட்களில் தெரிய வரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 27 Oct 2020, 8:06 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் விடுதலை தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக கிளம்பியுள்ளன. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ள நிலையில், தன்னைப் பற்றி தகவல்களை மூன்றாம் நபரிடம் வெளியிட வேண்டாம் என்று சசிகலா கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil சசிகலா
சசிகலா


இதனிடையே, அபராதத் தொகையை செலுத்துவதற்காக சசிகலா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. ஆனாலும், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் இறங்கியுள்ளார். கர்நாடக சிறை விதிகளின்படி, செப்டம்பர் இறுதியில் சசிகலா வெளியே வந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறையே முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு அது நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.

மனசெல்லாம் இபிஎஸ், மக்களுக்காக இபிஎஸ்: ஜெ பாதையில் பயணிக்கும் எடப்பாடி!

இந்த நிலையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான தகவல் இரண்டு நாட்களில் தெரிய வரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, நாளை ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். சசிகலாவின் அபராதத் தொகையை செலுத்த சொன்னால் அது பற்றி எனக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவிப்பார்கள். அதன் மூலம் நாங்கள் உடனடியாக அபராதத் தொகையை செலுத்த ஏற்பாடு செய்வோம். சசிகலாவின் விடுதலை குறித்து இரண்டு நாட்களில் தெரியவரும்” என்றார்.

அடுத்த செய்தி