ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் 20 தொகுதிகளில் ஒப்புகை சீட்டு அறிமுகம்

வரும் சட்டமன்ற தேர்தலில், தாங்கள் வாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, ஒட்டு சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படும் வசதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 சட்டமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படவுள்ளது

TNN 5 Mar 2016, 8:43 am
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில், தாங்கள் வாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, ஒட்டு சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படும் வசதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 சட்டமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படவுள்ளது.
Samayam Tamil voter acknowledgement receipt to be implemented in 20 assembly constituencies of tn puduchery
தமிழகம், புதுவையில் 20 தொகுதிகளில் ஒப்புகை சீட்டு அறிமுகம்


மே 16-ஆம் தேதியன்று, தமிழகத்தில் 17 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அண்ணா நகர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வடக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, திண்டுக்கல், திருச்சி மேற்கு, கடலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் விழுப்புரம், மதுரை கிழக்கு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒப்புகைக் சீட்டு வழங்கப்படும்.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில், உப்பளம், உருளையன்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.

இந்த ஒப்புகை சீட்டு வசதியின் மூலம், தாங்கள் வாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்ய முடியும் என்பதால், வாக்காளர் ஒப்புகை சீட்டு முறை பெருத்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி