ஆப்நகரம்

வாக்குச்சாவடி மையங்களில் புகைப்பிடிக்க தடை - லக்கானி

வாக்குச்சாவடி மையங்களுக்குள் புகை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.

TNN 24 Mar 2016, 4:31 pm
சென்னை: வாக்குச்சாவடி மையங்களுக்குள் புகை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil voting place should be no smoking zone rajesh lakkaani
வாக்குச்சாவடி மையங்களில் புகைப்பிடிக்க தடை - லக்கானி


இது குறித்து அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் மொத்தம் 136 கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளனர். இதில் 15 கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்கட்டமாக 16 தொகுதிகளில் நடமாடும் வாக்காளர் சேவை மையம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 7,500 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வரை 18 ஆயிரத்து 788 பேர் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

அடுத்த செய்தி