ஆப்நகரம்

சசிகலாவுக்கு ஆதரவாக கோஷமிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலாவுக்கு எதிராக அமைந்தும் அதிமுக தலைமை கழகத்தின் முன்பு அவருக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் கோஷமிட்டு வருகிறார்.

TNN 14 Feb 2017, 11:47 am
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலாவுக்கு எதிராக அமைந்தும் அதிமுக தலைமை கழகத்தின் முன்பு அவருக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் கோஷமிட்டு வருகிறார்.
Samayam Tamil vp kalairajan arrives at party hq and still supports sasikala
சசிகலாவுக்கு ஆதரவாக கோஷமிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் இன்ற தீர்ப்பளித்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பு வெளியான பின்பு அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி, தீர்ப்பு எதிராக அமைந்துவிட்டது என்று கூறி வருகிறார்.

முன்னதாக அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவியது. இதில், சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து பேசிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன், முதல்வர் பன்னீர்செல்வத்தின் கை அவரது உடலில் இருக்காது என சர்ச்சைக்குரிய வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசினார்.

கலைராஜனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக அவர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உந்துதல் காரணமாக அந்த கருத்தை தெரிவித்ததாகவும், தனது கருத்தை திரும்பப் பெறுவதகாவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பின்னரும் தன் மீது அரசியல் பளிவநகும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

VP Kalairajan arrives at party HQ and still supports Sasikala

அடுத்த செய்தி