ஆப்நகரம்

போலீஸ் பாதுகாப்புடன் உணவு விடுதிக்கு வந்த எஸ்.வி.சேகர்!

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் வந்து தனியார் விடுதியில் உணவருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2018, 10:09 am
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் வந்து தனியார் விடுதியில் உணவருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cats
போலீஸ் பாதுகாப்புடன் உணவு விடுதிக்கு வந்த எஸ்.வி.சேகர்!


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது. இருப்பினும், எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதனிடையே நடிகர் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதற்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் அருகே கீழ் படப்பையில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். அங்கு உணவருந்தி விட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்களும், வியாபாரிகளும் போலீசாரால் தேடப்படும் ஒரு நபர், போலீஸ் பாதுகாப்புடனே பொது இடங்களுக்கு வந்து செல்வது என்பது இந்த சட்டமும் அதிகாரமும் மக்களுக்கானது இல்லை என்பது தெளிவாக உணர்த்துகிறது என்று கூறினர். மேலும் இதுபோன்று அதிகார அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த செய்தி