மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பலத்த காற்று வீசுக்கூடிய காரணத்தால், கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
TNN 22 Jul 2016, 7:51 pm
சென்னை: பலத்த காற்று வீசுக்கூடிய காரணத்தால், கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.