ஆப்நகரம்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ஆதார் விவரங்களை பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNN 25 Sep 2016, 2:39 am
சென்னை: ஆதார் விவரங்களை பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil warning for ration shoop employees
ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை


தமிழகத்தில் "ஸ்மார்ட்" ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கடைகள் மூலம் மக்களிடம் இருந்து ஆதார் விவரம் பெறப்படுகிறது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு "பாயின்ட் ஆஃப் சேல்" கருவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆதார் விவரங்களை பதிவு செய்ய கடைக்கு வருவோரிடம் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதார் விவரங்களை பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ஸ்மார்ட்" ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதில் சிலர் தீவிரமாக உள்ளனர். அதற்கு ரேஷன் ஊழியர்கள் துணை போகக்கூடாது. "பாயின்ட் ஆஃப் சேல் கருவி" இயங்கவில்லை என்றால் உடனே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். மாற்று கருவி வழங்கப்படும். ஆதார் பதிவுக்கு வருவோரை, திருப்பி அனுப்புவதாக புகார் வந்தால், ஊழியர்கள் மீது இடைநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி