ஆப்நகரம்

மு.க.அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிடிவாரண்ட்

முறையான வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்விக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 Mar 2019, 3:37 pm
முறையான வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்விக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Alagiri Daughter


முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கருணாநிதியாலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். கருணாநிதி மறைவுக்குப் பின்னா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவரால் மீண்டும் கட்சிக்குள் நுழைய முடியவில்லை. திமுகவில் இணைய முடியாத நிலையில் அவா் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் முறையாக வருமான வரிக்கணக்கு செலுத்தாத வழக்கில் அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்விக்கு எதிராக எழும்பூா் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மு.க.அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக சுமாா் ரூ.70 லட்சம் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததைத் தொடா்ந்து அவருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடா்ந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி மலா்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி இன்றும் ஆஜராகாததைத் தொடா்ந்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீதிபதி மலா்மதி உத்தரவிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி