ஆப்நகரம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வாட்ச்மேன்!

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதை சுகாதாரத்துறை உறுதிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 9 Oct 2018, 3:57 am
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவருக்கு மருத்துவர்களுக்குப் பதில் வாட்ச்மேன் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Samayam Tamil maxresdefault (1)


விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிகிச்சை பெற சென்றுள்ளார். அவர் வந்த சமயத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்ததால் ஓட்டுநருக்கு நர்ஸும் மருத்துவமனை வாட்ச்மேனும் சேர்ந்து சிகிச்சை செய்துள்ளனர்.

இதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பலர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அங்கு இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பீதி ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதை சுகாதாரத்துறை உறுதிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி