ஆப்நகரம்

தமிழக அணைகளை கண்காணிக்க நீர் ஆணையம் அறிவுறுத்தல்

தமிழக அணைகளின் நீர்வரத்து, நீர்மட்டம், நீர்க்கசிவு போன்றவற்றை தொய்வின்றி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 12:42 am
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் அனைத்து அணைகளையும் கண்காணிக்குமாறு மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil vaigai


மத்திய நீர் ஆணையம் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில், பரவலாக மழை பதிவாகி வரும் நிலையில், அடுத்தடுத்த தினங்களில், கனமழை பெய்யக்கூடும் எனவும் 7ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது” என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு தமிழக அணைகளின் நீர்வரத்து, நீர்மட்டம், நீர்க்கசிவு போன்றவற்றை தொய்வின்றி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொன்னையாறு, வெள்ளாறு, பாலாறு, கொசஸ்தலையாறு ஆகிய ஆற்றுப்படுகைகளில் இருக்கும் நீர்தேக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி