ஆப்நகரம்

வனவிலங்குகள் மீது என்னவொரு கருணை? திருவண்ணாமலையில் தண்ணீரை வாரி வழங்கும் வள்ளல்கள்!

கோடை வெயிலில் குடிநீருக்காக தவித்து கொண்டிருக்கும் வனவிலங்குகளுக்கு, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கின்றன.

Samayam Tamil 23 Apr 2019, 6:17 pm
திருவண்ணாமலையில் அக்னிஸ்தலமாக திகழும் அண்ணாமலையார் கோயிலுக்கு சுமார் 1,776 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலையும், அதன் அடிவாரக் காட்டில் பலவிதமான மான்கள், லங்கூர் குரங்குகள், எறும்புத் தின்னிகள், கீரிப் பிள்ளைகள் மற்றும் ஏராளமான பறவைகள் வாழ்ந்து வருகின்றன.
Samayam Tamil Tiruvannamalai Forest Water


இவை அனைத்தும் கோடைக்காலங்களில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலைகளுக்கு வருகின்றன. அப்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது, உணவுக்காக வேட்டையாடப்படுவது மற்றும் விவசாய நிலங்களைப் பாழாக்குவது போன்ற அசம்பாவிதங்கள் நிகழும்.

இதைத் தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம், மாவட்ட வனத் துறையுடன் இணைந்து திருவண்ணாமலை அடிவாரக் காட்டிலுள்ள விலங்குகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக சிறிய தண்ணீர் குட்டைகளை அமைத்து அளித்து வருகின்றன.

அதில் விலங்குகள் குடிக்க தண்ணீர் வழங்கி வருகிறது. இந்தப் பணியை ஒவ்வொரு கோடைக்காலத்திலும் ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன் செய்து வருகிறது. இந்த ஆண்டும் மலைக்காட்டுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் மான்கள் வெளியே வருகின்றன.

இதைத் தவிர்க்க கடந்த இரு மாதங்களாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வனத்துறையின் ஒத்துழைப்புடன் கவுத்தி மலைக்காடு மற்றும் சொரகளத்தூர் காட்டுப் பகுதியிலும் புதிய தண்ணீர் குட்டைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிவடைந்து, அங்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி