கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாத இறுதியில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளதால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று ஆயிரத்து 607 கன அடியாக இருந்தது. இதையடுத்து இன்று ஆயிரத்து 663 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.17 அடியாக இருந்த நிலையில், தற்போது 105.19 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் மொத்த உயரம் 120 அடி ஆகும். அடுத்தடுத்த நாட்களில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் டெல்டா விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
விரைவில் கோடை காலம் தொடங்கவுள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. அதனைக் கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கினமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதியை கட்டம் கட்டிய ராமதாஸ்; அதுவும் இப்படி - பின்னணி என்ன?
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகளவு பொழிந்ததால் நடப்பாண்டில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறப்படுகிறது. மேட்டூர் அணை அடிவாரத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 41 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவலர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கப்பட உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் 24 முன்னாள் படைவீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் மொத்த உயரம் 120 அடி ஆகும். அடுத்தடுத்த நாட்களில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் டெல்டா விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
விரைவில் கோடை காலம் தொடங்கவுள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. அதனைக் கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கினமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதியை கட்டம் கட்டிய ராமதாஸ்; அதுவும் இப்படி - பின்னணி என்ன?
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகளவு பொழிந்ததால் நடப்பாண்டில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறப்படுகிறது. மேட்டூர் அணை அடிவாரத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 41 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவலர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கப்பட உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் 24 முன்னாள் படைவீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.