ஆப்நகரம்

தடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறையும் நீர்வரத்து!

பருவ மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2019, 10:01 am
கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவ மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்வேறு நீர் நிலைகள் நிரம்ப தொடங்கின.
Samayam Tamil Mettur Dam3


இதையொட்டி திறந்துவிடப்பட்ட நீரால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

Also Read: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கா? அதுவும் எங்கெல்லாம்? - வானிலை அப்டேட்!

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

மீண்டும் வரலாறு படைக்கும் வகையில், அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதற்கிடையில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

Also Read: முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்!

இந்த சூழலில் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை குறையத் தொடங்கியுள்ளது. இதையொட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

காவிரியில் நீரின் அளவு குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து 40,000 கன அடியாக சரியத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது.

Also Read: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

அணையில் இருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் இருந்து தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 107.75 அடியாக உள்ளது. நீர் இருப்பு 75.25 டி.எம்.சியாக இருக்கிறது.

அடுத்த செய்தி