ஆப்நகரம்

வேகமாக நிரம்பும் மோர்தானா அணை…!

மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருவதால் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 7 Oct 2017, 9:44 am
மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருவதால் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil water level continuously increasing in mordhana dam
வேகமாக நிரம்பும் மோர்தானா அணை…!


குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோர்தானா அணை. இது கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. 392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர் ஆகும். 11.5 மீ. உயரமுள்ள அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி ஆகும்.

சமீப காலமாக, மோர்தானா அணையின் முக்கிய நீர்ஆதாரமான ஆந்திர மாநில எல்லையில் உள்ள காட்டுப்பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமனேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 9.50 மீட்டராக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் ஒரு சில நாட்களில் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Water level continuously increasing in mordhana dam.!

அடுத்த செய்தி