ஆப்நகரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3 அடி மட்டும் இருப்பதால் வெகுவிரைவில் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 23 Aug 2019, 11:07 am
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 117 அடியாக உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!


கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த பலத்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் கடந்த 9-ஆம் தேதி 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், 14-ம் தேதி இரவு 108.92 அடியாக உயர்ந்தது.

தமிழகத்தில் எல்இடி தீவிரவாதிகள்; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை

பின்னர் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை தணிந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில் தமிழகம், கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணைக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பியது!

இதனால் நேற்று 116.53 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை மேலும் உயர்ந்து 116.93 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெண்களை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருந்த சைக்கோ கொலையாளி கைது!

அடுத்த செய்தி