ஆப்நகரம்

பொங்கி வழியும் காவிரி: கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவிலிருந்து 50, 000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jul 2018, 12:48 pm
கர்நாடகாவிலிருந்து 50, 000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil 201806030336305744_TN-members-to-Cauvery-panels-named_SECVPF


கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் , முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் , கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லிபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாகநிரம்பி வருகின்றன. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணை 115.20 அடி எட்டியது. இதன் முழு கொள்ளளவு 124.80 அடி என்பதால் , வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக உள்ளது. சுமார்39 , 667 கன அடி தண்ணீர் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

எனவே கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து சுமார்50, 000 கன அடி நீர்திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர் திறக்கப்பட்டதால் தமிழக அணைகளும் நிரம்பி வருகிறது. மேட்டூர், பவானிசாகர், முல்லைபெரியாறு, அமராவதி, பாபநாசம், சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் 40 சதவிகிதம் நிரம்பியுள்ளன.

அடுத்த செய்தி