ஆப்நகரம்

உச்சம் தொடப் போகிறது பவானிசாகர் அணை; அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு!

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 3 Nov 2019, 11:24 am
தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக மேட்டூர் அணை விளங்குகிறது. இதற்கடுத்த இடத்தில் பவானிசாகர் அணை உள்ளது. காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறான பவானி ஆறு மற்றும் மோயாறு ஒன்றாக கலக்கும் இடத்தில் அணை அமைந்துள்ளது.
Samayam Tamil Bhavanisagar Dam


இது 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2.47 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

யார், யார் எந்தெந்த இடத்தில் நியமனம்? தமிழகத்தில் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மலைப் பகுதி, வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதையொட்டி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

இந்த அணையில் அதிகபட்சமாக 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும். ஆதலால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

எப்படிப்பட்ட மழை தெரியுமா? அதுவும் 18 மாவட்டங்களில் - வானிலை மையம்!

இதனால் அணைக்கு நீர்பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் முழு கொள்ளளவை எட்டும் வகையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2007ஆம் ஆண்டு அணை முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,076 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 32.1 டி.எம்.சியாக உள்ளது.

இப்படியொரு வழக்கில் சிக்கிய மா.சுப்பிரமணியன்; தாக்கல் ஆனது குற்றப்பத்திரிகை!

அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 600 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும் என 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டும் போது, நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி