தூத்துக்குடியின் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அம்மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் திறந்துவிடப்படு்ம் தண்ணீரின் அளவு 104 கன அடியில் இருந்து 200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்து போன காரணத்தால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது. தற்போது தாமிரபரணி ஆற்றின் நீரானது தூத்துக்குடி மாநகராட்சியின் 50 முதல் 60 வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது. மற்ற பகுதிகள் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோக திட்டத்தின் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றன.
கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கும் வகையில் தனியார் கிணறுகள் எங்கெல்லாம் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி கூறியுள்ளார். தாமிர பரணி ஆற்றின் தண்ணீர் பிப்ரவரி மாதம் வரை தூத்துக்குடியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். அதன் பிறகு தனியார் கிணறுகளில் தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அம்மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் திறந்துவிடப்படு்ம் தண்ணீரின் அளவு 104 கன அடியில் இருந்து 200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்து போன காரணத்தால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது. தற்போது தாமிரபரணி ஆற்றின் நீரானது தூத்துக்குடி மாநகராட்சியின் 50 முதல் 60 வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது. மற்ற பகுதிகள் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோக திட்டத்தின் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றன.
கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கும் வகையில் தனியார் கிணறுகள் எங்கெல்லாம் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி கூறியுள்ளார். தாமிர பரணி ஆற்றின் தண்ணீர் பிப்ரவரி மாதம் வரை தூத்துக்குடியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். அதன் பிறகு தனியார் கிணறுகளில் தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.