ஆப்நகரம்

தண்ணீரைத் தேடி ஊர் ஊராக அலையும் சென்னை வாசிகள்: பகீர் ரிப்போர்ட்..!

சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், அப்பகுதியில் வசிக்கும் பலரும் ஊர் ஊராக தண்ணீரை தேடி அலைந்த வண்ணம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

Samayam Tamil 3 Jun 2019, 11:39 am
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், நகரவாசிகள் பலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதும், விடுமுறைக்கு சென்றவர்கள் சிறிய காலதாமத்திற்கு பிறகு திரும்புவம், தண்ணீர் வசதி கொண்ட இடத்திற்கு குடிமாறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil தண்ணீர் பஞ்சத்தில் அவல நிலைக்கு சென்றுவிட்ட சென்னை
தண்ணீர் பஞ்சத்தில் அவல நிலைக்கு சென்றுவிட்ட சென்னை


கோடம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த அசோக் குமார் (50), அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் தற்போது கே.கே. நகர் பகுதிக்கு குடிமாறியுள்ளார். சொந்தமாக சாப்பாட்டுக் கடை நடத்தி வரும் அவர், கோடம்பாக்கத்தில் 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. தண்ணீர் வரும் நேரத்தில் வீட்டில் இல்லை என்றால், அன்றைய பொழுது திண்டாட்டம் தான். இந்த கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் கே.கே. நகருக்கு மாறிவிட்டதாக கூறுகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு பருவமழை தவறிவிட்டது. இதனால் வழக்கமான மழைப்பொழிவு இல்லை. இதனால் 2018ம் ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கியது. இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களை வறட்சி பாதித்த மண்டலமாக மாநில அரசு அறிவித்தது. கடந்தாண்டில், தமிழகத்தில் தண்ணீர் தேவை 19 சதவீதத்திலிருந்து 59 சதவீதம் வரை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் , செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் முற்றிலும் காலியாகி வருகிறது. பெருங்குடியை சேர்ந்த எம்.எஸ். ஸ்ரீகாந்த், தன்னுடைய பகுதியில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் தற்போது உறவினர் வீடுகளில் தங்கி வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணியில் உள்ள அவர், 10 நாட்களாக தண்ணீர் இல்லாத காரணத்தினால், குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தன்னுடைய சகோதிரி வீட்டுக்கு சென்றுவிட்டார். சென்னை திரும்ப முயற்சி எடுத்தாலும், தன்னுடைய வசிப்படத்தில் இன்னும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.

பெருங்குடியைச் சேர்ந்த மற்றொருவரான கே. கோபால், கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தன்னுடைய பகுதியில் இருந்து பலரும் குடிமாறிவிட்டனர். விரைவில் இந்த நிலை தனக்கும் ஏற்படலாம் என வேதனையுடன் கூறுகிறார்.

அடுத்த செய்தி