ஆப்நகரம்

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு

தேனி மற்றும் மதுரை மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்காக, நாளை முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடும்படி, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

TNN 13 Jul 2016, 4:35 pm
தேனி மற்றும் மதுரை மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்காக, நாளை முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடும்படி, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil water to be released from mullaperiyar dam starting thursday
முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு


இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 14ம் தேதியான வியாழக்கிழமை தொடங்கி, அடுத்த 120 நாட்களுக்கு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி, தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலப்பகுதி, இதன்மூலமாக, பயன்பெறும் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி