ஆப்நகரம்

மீண்டும் திறக்கப்பட்ட மேட்டூர் அணை: விவசாயிகள் உற்சாகம்!

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக இன்று பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

Samayam Tamil 17 Aug 2020, 11:01 am
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Samayam Tamil mettur dam


மேட்டூர் அணை 100 அடியை எட்டிய நிலையில் ஜுன் 12ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். குடி மராமத்துப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 நாள்களுக்கு முன்னதாகவே நீர் கடைமடை வரை பாய்ந்ததாக முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவந்த நிலையில் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அணை நீர் மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீர் வரத்து குறைந்ததால் தற்போது 99 அடி நீர் உள்ளது. 63.590 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

அமலுக்கு வந்தது அனைவருக்கும் இ பாஸ்: வேறு என்ன சிக்கல்?

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்கள் வழக்கமாக ஆகஸ்ட் 1ஆம் தேதி திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு 1ஆம் தேதி திறந்துவிடப்படவில்லை. எனவே சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கைவைத்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் நீர் திறக்க உத்தரவிட்டார்.

இரண்டாம் தலைநகர் மதுரை: அமைச்சர் நிறைவேற்றிய தீர்மானம்- அடுத்த கட்டம் இதுதானா?

அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்னன், சரோஜா, தங்கமணி, மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் தண்ணீர் திறந்துவைத்தனர். விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. டிசம்பர் 31ஆம் தேதி வரை 137 நாள்கள் தண்ணீர் தொடர்ச்சியாக பாயும். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர் நிலமும், ஈரோட்டில் 17,236 ஏக்கர் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில் 11, 323 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி