ஆப்நகரம்

போர் அகதிகள் தெரியும்..அதென்ன நீர் அகதிகள்?? : பீதியை கிளப்பும் வாட்டர்மேன்

போர் அகதிகள், சூழலியல் அகதிகள், புலம்பெயர்ந்தோர் என அகதிகளுக்குள் சில பிரிவுகள் உண்டு... .. ..

Samayam Tamil 20 Sep 2019, 8:10 am
போர் அகதிகள், சூழலியல் அகதிகள், புலம்பெயர்ந்தோர் என அகதிகளுக்குள் சில பிரிவுகள் உண்டு. இதனை குறைக்கவும், இவர்களுக்கு வேண்டியவற்றை செய்து தந்து மேலும் அகதிகள் உருவாகாமல் இருக்க ஐநாவின் அகதிகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு செயல் பட்டு வருகிறது.
Samayam Tamil rajendra singh


ஆனால், அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் நீராதார சிக்கல்களால், நாடு விட்டு நாடு மக்கள் நீருக்காக இடம்பெயர்ந்து அகதிகளாகும் அபாயம் உள்ளது என்று வாட்டர்மேன் என்று அழைக்கப்படும் ராஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாடு விட்டு நாடு மக்கள் நீருக்காக இடம்பெயர்ந்து அகதிகளாகும் அபாயம் உள்ளது
வாட்டர்மேன் ராஜேந்திரசிங்

வறண்ட நிலங்களிலிருந்து மக்கள் புலம்பெயரத்தொடங்கிவிட்டனர். ஏற்கனவே, மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளிலிருந்து ஐரோப்பிய பகுதிகளுக்கு புலம்பெயரத்தொடங்கி விட்டனர். இந்தியாவில் இது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நகரும் மக்கள் என்ற வடிவில் நடந்துகொண்டிருக்கிறது. இது உலக மக்களின் சமநிலையான வாழ்வை வெகுவாக பாதிக்கும்.

அதாவது, இந்தியாவில் 70 %க்கும் மேல் நீர்நிலைகள் வறண்டுவிட்ட நிலையில், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரும் அவர்களின் தேவை நகரங்களின் ஒய்யாரமோ, அல்ல. அங்கு லாரிகளிலாவது கொண்டுவரப்படும் தண்ணீர்.

உலக வள நிறுவனம் (World Resources Institute - WRI) வெளியிட்டுள்ள உலக அபாய அட்லஸில் இந்தியாவின் நீர் பிரச்சினை உச்சம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், இந்தியா இன்னும் பத்தாண்டுகளில் நேரடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கு காரணம் முழுக்க முழுக்க நீர் மேலாண்மையின்மைதான். இந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள 365 நகரங்களில் வறட்சி நிலவியது. அதே சமயம் 190க்கும் மேற்பட்ட நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை மேலாண்மை செய்யத்தெரியாததே காரணம் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?
-
இந்தியாவின் 21 நகரங்களில் 2020ஆம் ஆண்டில் ஒரு சொட்டு நிலத்தடிநீரும் இருக்காது என்ற நிதி ஆயோக்கின் அறிக்கையை சுட்டிகாட்டி பேசிய அவர், இந்தியா மீளமுடியாது என்றில்லை. சிலவற்றை செய்தால் “நீருக்கான ரிசர்வ் வங்கியாக ” இந்தியா மாறும் என்றும் தெரிவித்தார்.

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோம் நகரில் சர்வதேச நீர் நிறுவனம் நடத்திய “உலக நீர் வார” நிகழ்வில் பேசிய இந்தியாவின் வாட்டர்மேன் ராஜேந்திர சிங் இவ்வாறு தெரிவித்துள்ளது சூழலியல் கவலைகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

அடுத்த செய்தி