ஆப்நகரம்

கருத்துகளை அகற்ற தயார்; மெர்சல் தயாரிப்பாளர்

மெர்சல் திரைப்படத்தில் வரும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற தயாராக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNN 21 Oct 2017, 7:19 pm
மெர்சல் திரைப்படத்தில் வரும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற தயாராக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil we are ready to remove mersal politcal dialogues says thenandal films
கருத்துகளை அகற்ற தயார்; மெர்சல் தயாரிப்பாளர்


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் வசனங்களில் ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்துக்களை விஜய் சொல்லி இருக்கிறார் என்று பிஜேபியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஜிஎஸ்டி பற்றிய காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் படத்தை ரீ சென்சார் செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். முன்னணி பிரபலங்கள் மெரசலுக்கு ஆதரவாக தங்கள் குரல்களை எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தில் வரும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற தயாராக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், மெர்சல் திரைப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்படவில்லை என்றும் சர்ச்சைகள் குறித்த பாஜக வின் முக்கிய தலைவர்களை சந்தித்து, வசனங்களின் நோக்கத்தை விளக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி