ஆப்நகரம்

படகுகள் திருப்பித் தரப்படும்: இலங்கை அமைச்சர் அமரவீர

மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பித் தரப்படும் என இலங்கை மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

TNN 19 Feb 2017, 11:10 am
கொழும்பு: மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பித் தரப்படும் என இலங்கை மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we can return back fishermen boats sri lankan minister
படகுகள் திருப்பித் தரப்படும்: இலங்கை அமைச்சர் அமரவீர


இலங்கை கடற்படையினர், இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பித் தரப்படும் என இலங்கை மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். எதிர்ப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் கைது நடவடிக்கை தொடரும் என ஏற்கனவே இவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We can return back fishermen boats: Sri lankan minister

அடுத்த செய்தி