ஆப்நகரம்

விஜயகாந்த் இல்லாமலே திமுக வெற்றி பெறும்: துரைமுருகன்

தேமுதிக கட்சியின் கூட்டணி இல்லாமலே வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைக்கும் என்று திமுகவின் தலைமைநிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்

TNN 17 Mar 2016, 1:47 pm
சென்னை: தேமுதிக கட்சியின் கூட்டணி இல்லாமலே வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைக்கும் என்று திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.
Samayam Tamil we can win without vijayakanth says durai murugan
விஜயகாந்த் இல்லாமலே திமுக வெற்றி பெறும்: துரைமுருகன்


கடந்த வாரம் நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். இது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சில அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா திருப்பத்தூரில் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துரைமுருகன் பேசியதாவது, "மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் சேர்பவர்களை நான் வரவேற்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் திமுக நிற்கும். கூட்டணி கட்சிகளுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படாது

விஜயகாந்த் எங்களுக்கு தேவை இல்லை. திமுக கப்பில் இருக்கும் ஐஸ்கிரீம் போன்றது. அதில் இருக்கும் செர்ரி பழத்தை போன்றவர் தான் விஜயகாந்த். அனைவரும், ஐஸ்கிரீமை தான் விரும்பி சாப்பிடுவார்கள். செர்ரி பழத்தை தூக்கி எரிந்து விடுவார்கள். மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி