ஆப்நகரம்

தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது: கருணாநிதி

தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என கச்சத்தீவு விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

TNN 21 Jun 2016, 1:18 pm
சென்னை: தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என கச்சத்தீவு விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we cant wake up one who acting as sleeping karunanidhi on kachchatheevu
தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது: கருணாநிதி


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கச்சத் தீவு” பற்றி தமிழகச் சட்டப் பேரவையில் நேற்றைய தினம் (20-6-2016) அன்று பிரச்சினை ஏற்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத் தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991-ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். துhங்குபவர்களை எழுப்ப முடியும், துhங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? என்று கூறியுள்ளார்.

கச்சத்தீவு பற்றி ஜெயலலிதாவின் கருத்துக்கு விளக்கம்Read: https://t.co/0cmYzU4nb6— KalaignarKarunanidhi (@kalaignar89) June 21, 2016

மேலும், கச்சத்தீவு விவகாரம் குறித்து விளக்கியுள்ள கருணாநிதி, கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்த போது அதற்கு தான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால், தான் கூறியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு பற்றி ஜெயலலிதாவின் கருத்துக்கு மறுப்பு!Read: https://t.co/0YACAJm6O3— KalaignarKarunanidhi (@kalaignar89) June 21, 2016

தொடர்ந்து, நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, அவ்வப்போது எதையாவது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது! என்றும் தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி