ஆப்நகரம்

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை; பாஜகவில் சேரட்டும்: ஜெயக்குமார் பளீச்!

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 6 Jun 2022, 2:18 pm
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.
Samayam Tamil ஜெயக்குமார், சசிகலா
ஜெயக்குமார், சசிகலா


அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று கூறும் சசிகலா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முன்னாள் ஜெயக்குமார், “திரைப்படத்தில் வடிவேல் சொல்வதுபோல் திரும்பத் திரும்ப பேசுகிறார் சசிகலா. சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை. பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சிசகலா நினைக்கிறார். சசிகலாவின் கருத்திற்கு தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை. சசிகலா விரும்பினால் பாஜகவில் சேரட்டும். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுகவில் 4 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் அதிமுகவிற்கு வந்துவிட்டனர். கூடிய விரைவில் அமமுக என்ற ஒரு கட்சியே இருக்காது.” என்றார்.

முன்னதாக, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை எனும்பட்சத்தில், ஒருவேளை அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம் அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்; கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக எடுக்கும் என்று அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
அதிரடியில் இறங்கிய சசிகலா: என்னை யாரும் அப்படி சொல்ல முடியாது!
ஆனால், சசிகலா பாஜகவில் சேரலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என தெரிவித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, யார் வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம். மூத்த தலைவர்கள் இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அடுத்த செய்தி