ஆப்நகரம்

சட்ட திட்டத்திற்கு உட்பட்டே பொதுச்செயலாளராக சின்னம்மா நியமனம்: முதல்வர் பன்னீர் செல்வம்

தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை பொறுப்பேற்க வலியுறுத்தி, போயஸ் கார்டனுக்கு முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் சென்றுள்ளனர்.

TOI Contributor 29 Dec 2016, 10:48 am
தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை பொறுப்பேற்க வலியுறுத்தி, போயஸ் கார்டனுக்கு முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் சென்றுள்ளனர்.
Samayam Tamil we have selected chinnamma as per laws cm panneer selvam
சட்ட திட்டத்திற்கு உட்பட்டே பொதுச்செயலாளராக சின்னம்மா நியமனம்: முதல்வர் பன்னீர் செல்வம்


இந்த தீர்மானத்தை மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.டி. ராஜேந்திரன் பாலாஜி, குமரகுரு, ராமச்சந்திரன், விவேகா கோவிந்தராஜ், பாப்புலர் முத்தையா ஆகியோர் முன் மொழிந்தனர். தற்போது செங்கோட்டையனும், பன்னீருடன், பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர் போயஸ் கார்டன் சென்று கொண்டு இருக்கின்றனர்.

#InsideVisuals of AIADMK general body meeting in Chennai pic.twitter.com/J39nHoWvw6 — ANI (@ANI_news) December 29, 2016 சென்னையில் இன்று கூடிய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை சசிகலாவிடம் கொடுத்து, அவரை இந்தப் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுக்க முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் கார்டன் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து பன்னீர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. சின்னம்மாவை சட்ட, திட்டத்திற்கு உட்பட்டு பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளோம். அவரிடம் இந்த தீர்மானத்தை அளிக்க நாங்கள் சென்று கொண்டுள்ளோம்'' என்று தெரிவித்தார். Chennai: AIADMK general body meeting underway (Inside Visuals) pic.twitter.com/hpuU0FFQCQ — ANI (@ANI_news) December 29, 2016

அடுத்த செய்தி