ஆப்நகரம்

குறிவச்சு தான் அடிச்சோம்; ஆனா எண்ணல - எதுக்கு பாகிஸ்தான் கேட்கணும் - கடுப்பான தளபதி!

பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தினோம், ஆனால் பாகிஸ்தான் எதற்கு கேள்வி கேட்கிறது என்று விமானப்படை தளபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 4 Mar 2019, 4:46 pm
கோவை அடுத்த சூலூரில் விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீதுதான் குறிவைத்தோம்.
Samayam Tamil Birender Singh


எங்கள் நோக்கத்தின் படி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் முகாம்களை சரியாகத் தாக்கிவிட்டோம். அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்தது வனப்பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் பயிற்சி முகாம். இதற்கு எப்படி பாகிஸ்தான் கேள்வி கேட்கலாம்.

விமானத் தாக்குதலில் எப்போதும் இழப்புகள் குறித்து சரியாக கூற இயலாது. எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்று நாங்கள் எண்ணவில்லை. இதனை அரசு தெளிவுபடுத்தும் என்றார்.

இதையடுத்து மிக்-21 குறித்த கேள்விக்கு, இது விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் ரேடார், வானில் நேரடியாக தாக்கும் திறன், ஆயுதங்கள் உள்ளிட்ட சிறப்புகள் உள்ளன என்றார்.

அடுத்த செய்தி