ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்ற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை: தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை என்று, மாநில அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 19 Jan 2017, 9:57 pm
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை என்று, மாநில அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we need presidents approval for special jallikattu ordinance says tamilnadu govt lawyer
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்ற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை: தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்


இன்று காலை டெல்லியில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக, அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தினார். எனினும், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், எந்த உதவியும் செய்ய முடியாது எனக் கூறிய பிரதமர் மோடி, தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதாக, உறுதி அளித்தார்.

இதையடுத்து, தமிழகம் திரும்பாமல், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியிலேயே முகாமிட்டு, வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். ஜல்லிக்கட்டை நடத்த, மாநில அரசே அவசர சட்டம் இயற்றலாமா, அதனால் வரும் சட்ட சிக்கல்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக அப்போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில் தமிழக அரசு வழக்கறிஞர் சுப்ரமணிய பிரசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதன் முடிவாக, செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணிய பிரசாத், குடியசுரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் இருந்தால் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை தமிழக அரசே நிறைவேற்றலாம் எனக் குறிப்பிட்டார்.

இதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள தமிழக அரசும், வழக்கறிஞர்களும் தயாராக உள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

We need President’s approval for special Jallikattu ordinance, says tamilnadu govt lawyer.

அடுத்த செய்தி