ஆப்நகரம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தி விவசாயிகளை காப்போம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தி விவசாயிகளை காப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

TNN 26 Feb 2017, 5:09 pm
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தி விவசாயிகளை காப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil we should stop hydro carbon project and save farmers says vijayakanth
ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தி விவசாயிகளை காப்போம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்


இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஹைட்ரோகார்பன் திட்டணிகளை உடனடியாக நிறுத்தி, விவசாயிகளை காப்பது நமது கடமை என்று கூறியுள்ளார். விவசாயிகள் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், அவர்கள் மேலும் பாதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடன் தொல்லை, வறட்சியால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார். அதனால் மக்கள் கருத்தை கேட்காமல் திட்டத்தை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது அல்ல என்று விஜயகாந்த் கூறியுள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டம் வலுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

We should stop Hydro Carbon Project and save farmers says Vijaykanth.

அடுத்த செய்தி