ஆப்நகரம்

பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம்: ராஜேந்திர பாலாஜி!

பிரதமருக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Apr 2018, 3:33 pm
சென்னை: பிரதமருக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rajendra Balaji
ராஜேந்திர பாலாஜி


நான்கு மாநிலங்கள் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைக் காலக்கெடு முடிந்தும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி தொடங்கவுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகையை ஒட்டி, சென்னை, விமான நிலையம், மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மோடி வருகையின் போது, கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவோம்.

காவிரி நீரை பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம் என கூறியுள்ளார்.

We show green signal to PM Modi says Minister Rajendra Balaji.

அடுத்த செய்தி