ஆப்நகரம்

கிருஷ்ணசாமி மீது சட்டரீதியாக நடவடிக்கை-ஸ்டாலின்

மறைந்த மாணவி அனிதாவுக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி வரும் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

TNN 4 Sep 2017, 10:02 pm
மறைந்த மாணவி அனிதாவுக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி வரும் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Samayam Tamil we take the legal action against dr krishnasamy stalin
கிருஷ்ணசாமி மீது சட்டரீதியாக நடவடிக்கை-ஸ்டாலின்


அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மீது கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். மேலும், அனிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கூறினார்.

மாணவி அனிதாவின் மரணம் குறித்து விவாதிக்கவும், நீட் தேர்வுக்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் "நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முதற்கட்டமாக, செப் 8 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளார்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பிரச்னையை திசை திருப்புகிறார் என்றும், அவர் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.

We take the legal action against Dr.krishnasamy - stalin

அடுத்த செய்தி