ஆப்நகரம்

'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்':மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..!

தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்போம் என மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

TNN 9 Feb 2017, 7:10 pm
தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்போம் என மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we will announce our political stand tomarrowsays thamimun ansari m l a
'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்':மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..!


மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து வந்து,மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கிய தமிமுன் அன்சாரி,கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாகப்பட்டினம் தொகுதியில் வென்றார்.இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்,அவர் அதிமுக எம்.எல்.ஏவாகவே கருதப்படுகிறார்.

இந்நிலையில் தற்போதைய பரபரப்பான சூழலில் தமிமுன் அன்சாரியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.இதற்கு பதிலளித்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளரான தமிமுன் அன்சாரி,நாளை தங்கள் கட்சியின் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளை முடிவை அறிவிப்பதாக தமிமுன் அன்சாரி கூறுவதை வைத்து பார்க்கும் போது,அவர் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

we will announce our political stand tomarrow,says Thamimun Ansari M.L.A

அடுத்த செய்தி